INDIAN 7

Tamil News & polling

தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!

31 மார்ச் 2023 08:00 AM | views : 78
Nature

அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம்.

இது தொடர்பாக, தஞ்சையில் தங்கிருந்த டிடிவி தினகரனை அண்ணாமலையின் ஆலோசகர்கள் அண்மையில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாய் நிற்கும் ஆடிட்டரின் யோசனைப்படியே இந்த சந்திப்புகள் நடந்ததாம்.

“ஈபிஎஸ் கூடாரத்தைக் கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்” என ஆலோசகர்கள் பேசியதைக் கேட்டு தெம்பாகி இருக்கும் தினகரன், அதே தெம்புடன் ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கிறார். இந்தப் பயணத்தின் போது தெற்கில் தினகரன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். இந்தக் கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக் கணக்கில் அமமுகவில் இணைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம்!

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான

Image சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு

Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்