POLLING FLAMES 📊 TN ELECTION 2026
வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.
அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலியில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினரால் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சோதனையின்போது ரூ. 20.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை மீது அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், அவரது குற்றச்சாட்டுகளுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்தது.இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை செய்தது தொடர்பான முழு ஆதாரங்களையும் ஏப்ரல் 24-ல் வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
« முந்தைய செய்தி (Previous)
சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்ற திருப்பூர் பனியன்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: