POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், பிரேமலதா,வாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

1 month ago 26 பிப்ரவரி 2026 06:07 AM | views : 591

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101). எளிமை யின் அடையாளமாக கருதப்பட்ட நல்லகண்ணு, சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு (2025) மே மாதம் 9-ந்தேதி திடீரென நல்ல கண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலை யில் வீடு திரும்பினார்.

இதனையடுத்து அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மீண்டும் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு கடந்த 23-ந் தேதி உடல்நி லையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து. அவருக்கு 'வெண்டிலேட்டர்' உத வியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்து ரமேஷ் நாடார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், நடிகர் செந்தில், இயக்குனர் கவு தமன் உள்ளிட்டோர் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நேரில் வந்து நேற்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நல்லகண்ணுவின் முக் கிய உடல் உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துவிட்டதாக நேற்று மதியம் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

நல்லகண்ணு உயிரிழந்த செய்தி அறிந்ததும், மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து உடனடியாக நல்லகண்ணுவின் உடல் 'எம்பாமிங்' செய்யப்பட்டது. பின்னர், ஆஸ்பத்திரியில் இருந்து தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக பாலன் இல்லத்திற்கு தொண்டர்கள் புடைசூழ நல்லகண்ணுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 3 மணி வரை வைக்கப்படுகிறது. இதற்கிடையே நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொதுமக்களின் அஞ்சலி மற்றும் அரசு மரியாதைக்கு பின்னர் நல்லகண்ணுவின் உடல் ஊர் வலமாக சென்னை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருடைய உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்தது. மேலும், ஒரு வாரத்திற்கு கட்சியின் கொடி அரை கம்பத்திற்கு பறக்கவிடப்படும் எனவும் கூறியுள்ளது.

தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு எ.வ.வேலு, மற்றும் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நல்லகண்ணுவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகி கள், தொண்டர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதேபோல் நல்லகண்ணு உடலுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் என நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,அமைச்சர் அன்பில் மகேஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன், இயக்குநர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் கார்த்தி,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

நல்லவராக, நேர்மையாக இருந்தால் மதிப்பும், மரியாதையும் தானாக வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு நல்லகண்ணு என்றார்.

* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில்,

நல்லகண்ணு அய்யா மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.

* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கூறுகையில்,

நூறு ஆண்டுகளுக்கு மேல் அவர் வாழ்ந்தார் என்பது நிறைவு அளிக்கிறது என்றார்.

* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில்,

யாரும் வெறுக்க முடியாத மனிதர்; எளிமையின் மறுபெயர் என்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ADMK ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK காங்கிரஸ் AIADMK பாமக தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கனமழை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் UDHAYANIDHI STALIN CONGRESS கோவை COIMBATORE தேவர் EDAPPADI PALANISWAMI ரஜினிகாந்த் தமிழகம் சட்டசபை தேர்தல் இந்திய அணி கைது கொலை வன்னியர் அமமுக THIRUMAVALAVAN KEERTHY SURESH OPS சீமான் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை NELLAI TAMIL ACTRESS INDIAN CRICKET TEAM தமிழ்நாடு மதுரை SURIYA கொரோனா ஓபிஎஸ் நெல்லை AJITH CSK கள்ளக்காதல் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL விடுமுறை மோடி ELECTION COMMISSION தென்காசி அஜித் ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI சூர்யா தூத்துக்குடி