INDIAN 7

Tamil News & polling

சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

25 அக்டோபர் 2021 01:16 PM | views : 81
Nature

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம் என கூறினார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாகவும், அதிமுகவில் தொண்டர் முதல் தலைவர் வரை அரசியல் நாகரீகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அரசியலிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்றுக்கொள்வது மக்களின் முடிவு என கூறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை நினைவூட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்