பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்: அண்ணாமலை பேட்டி

பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்:  அண்ணாமலை பேட்டி

  ஏப்ரல் 09, 2024 | 04:01 pm  |   views : 89


நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.



இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். பின்னர், பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். கையில் தாமரை சின்னம் ஏந்தி, வாகன பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜ.க. வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.இதன்பின்னர், பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது, சென்னை மக்கள் தங்களுடைய சொந்த மக்களை போல் பிரதமரை வரவேற்கிறார்கள்.சென்னை மக்கள் பிரதமர் மோடியை திறந்த கரங்களுடன் வரவேற்றனர். இன்றைய வாகன பேரணியானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் வழியாக தமிழகத்தின் மனநிலை தெளிவாக தெரிகிறது. மக்கள் உண்மையில் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இது ஏப்ரல் 19-ந்தேதி ஒரு பெரிய அளவில் எதிரொலிக்க இருக்கிறது என்று பேசியுள்ளார்.



Also read...  ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்


இதேபோன்று, பா.ஜ.க.வின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, பிரதமர் மோடியின் வருகை நிச்சயம் எங்களுக்கு உதவும். அவர் 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ, தி.மு.க.வின் ரகசியம் வெளிப்படுகிறது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறியுள்ளார்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்

2024-05-13 12:32:23 - 19 hours ago

ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஜெயக்குமாரின் உடலில் 15 செ.மீ-50 செ.மீ. அளவு கடப்பா கல், கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் வாயில் இருந்தது. ஜெயக்குமாரை காணவில்லை என 3-ம் தேதி புகார் வந்தது; அன்று இரவு 9


ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

2024-05-13 12:29:42 - 19 hours ago

ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்!

2024-05-10 07:15:35 - 4 days ago

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்! கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில்


சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

2024-05-09 06:12:32 - 5 days ago

சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள் சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்


ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

2024-05-09 05:59:23 - 5 days ago

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்


வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்

2024-05-09 03:23:30 - 5 days ago

வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர் தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக


தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு

2024-05-09 03:22:52 - 5 days ago

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தம்பி தேவேந்திரன்


கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 6 days ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக