INDIAN 7

Tamil News & polling

காய்ச்சல் - தேடல் முடிவுகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு சென்னை, கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் எச்-1, என்-1 பறவை காய்ச்சல் தொற்று

கேரளாவில் பரவும் மூளை காய்ச்சல் - சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடு திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் சமீப காலமாக அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பால் அங்கு இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநில சுகாதாரத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு

KFC சிக்கனால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.10,000 நஷ்டஈடு! திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி

HMPV புதிய வைரஸ் அல்ல.. மக்கள் பீதியடைய வேண்டாம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி

HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு குழந்தைக்கு ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல். பெங்களூருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் (Human Metapneumovirus) பாதிப்பு கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. HMPV வைரஸ் பற்றி

அமைச்சர் கே என் நேரு மருத்துவமனையில் அனுமதி! தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு அரசியல் களத்தில் படு வேகமாக சுற்றி வருபவர், தற்போது மழை பாதிப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். சென்னை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி பணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

 தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில்

சீதாராம் யெச்சூரி காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாரம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சீதாரம் யெச்சூரி தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்

உலகை மிரட்டும் குரங்கு அம்மை.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது எய்ம்ஸ்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தற்போது குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் குரங்கு அம்மை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் குரங்கு அம்மை நோய் (Mpox) அறிகுறிகளுடன் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய

திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால் கொச்சி,மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்