POLLING FLAMES

 

HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

1 year ago 06 ஜனவரி 2025 11:55 AM | views : 224
இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு குழந்தைக்கு ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல்.


பெங்களூருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் (Human Metapneumovirus) பாதிப்பு கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. HMPV வைரஸ் பற்றி தமிழக அரசு என்ன சொல்லி இருக்கிறது? HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகள், அதாவது மூன்று மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை இருவருக்கு HMPV என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு, அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பி இருப்பதாகவும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் HMPV வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், இந்த வகையான தொற்று நோய் காற்றில் பரவக்கூடியது என்றும், கொரோனா தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த HMPV வைரஸ் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் எனவும், மேலும் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா தொற்று போலவே இது அதே பாதிப்பை உண்டாக்கக்கூடிய வைரஸ் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.



HMPV வைரஸ் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மற்றும் தொற்று ஏற்பட்டால் சமாளிக்க முழு தயார் நிலையில் மருத்துவமனைகள் உள்ளன என இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் HMPV வைரஸ் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.



தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லையோர பகுதிகளில் HMPV வைரஸ் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS NELLAI நெல்லை சூர்யா THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா SURIYA AJITH ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் விடுமுறை அன்புமணி வடகிழக்கு பருவமழை தீபாவளி ELECTION COMMISSION தூத்துக்குடி கள்ளக்காதல் அஜித் திருப்பரங்குன்றம் மதுரை பாலியல் தொல்லை RAJINIKANTH தென்காசி CSK