தலைவர் 170 படத்துக்கு இதுதான் டைட்டிலா?.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

தலைவர் 170 படத்துக்கு இதுதான் டைட்டிலா?.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

  டிசம்பர் 11, 2023 | 04:17 pm  |   views : 251


கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.



ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும் ரஜினிகாந்தின் புதிய படங்கள் வெளியானால் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.




நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிக்கும் படி இயக்கி மீண்டும் ரஜினி ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் நிறுவியுள்ளார். காலா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது.




Also read...  தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு



வரும் பொங்கலுக்கு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படம் வெளியாக போகிறது. அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா அறிவித்துள்ளது.




அ எழுத்தில் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டவன் என்றும் ஆதித்யன் என்றும் சில பெயர்களும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. நாளை மாலை 5 மணிக்கு தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் எல்லாம் தற்போது காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாளை நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் ஏதாவது அப்டேட் விடுவாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்!

2024-05-10 07:15:35 - 2 days ago

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்! கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில்


சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

2024-05-09 06:12:32 - 3 days ago

சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள் சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்


ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

2024-05-09 05:59:23 - 3 days ago

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்


வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்

2024-05-09 03:23:30 - 3 days ago

வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர் தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக


தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு

2024-05-09 03:22:52 - 3 days ago

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தம்பி தேவேந்திரன்


கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 5 days ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை

2024-05-07 06:37:01 - 5 days ago

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாத்தான்குளம் தனியார் கல்லூரியில் ரூபி மனோகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை திசையன்விளை அருகே உள்ள தமது வீட்டின் அருகே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக


ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024-05-07 04:36:06 - 5 days ago

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த