INDIAN 7

Tamil News & polling

ஜெயலலிதா சொன்ன சிலந்தி கதை சொல்லி ஈபிஸை வெளுத்து வாங்கிய சசிகலா!

25 பிப்ரவரி 2025 10:22 AM | views : 74
Nature

நேற்றைய (24-02-2024) தினம் அம்மாவின் பிறந்தநாளின் போது சிலந்தி கதை ஒன்றை சொல்லி இபிஎஸ் கூட்டத்தாரை வெளுத்து வாங்கியிருக்கிறார் சசிகலா..

தன்னலம் மறந்து பொது நலத்துடன் செயல்பட நமது புரட்சித்தலைவி அம்மா சொன்ன கதைதான இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். அப்படி போகும்போது சிலந்தி பூச்சி ஒன்றை மிதிக்காமல் கவனமாக செல்கிறான். அந்த சிறிய புண்ணியத்துக்காக சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த மனிதனிடம் மேலே ஒரு சிலந்தி சொர்க்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனுடைய இழை கீழே வரை தொங்குகிறது, அதைப் பிடித்து மேலே வந்துவிடு என்று சொல்கிறார்கள். அதைப்போல் இவரும் நூலிழையை பிடித்து மேலே ஏற, அதைப்பார்த்து நரகத்திலுள்ள இன்னும் சிலரும் அந்த இழையை பிடித்து மேலே ஏறி வருகிறார்கள்.

அப்போது இவர், தான் மட்டும்தான் சொர்க்கத்திற்கு போகணும் என்று நினைத்து மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார். அந்த நூலிழையில் தான் இருபதை மறந்து விடுகிறார். அதனால் இழை அறுந்து அவரும் கீழே விழுகிறார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், யாராக இருந்தாலும் சுய நலமில்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.

இப்படி ஒன்று பட்டு நின்றால் தான் வென்று காட்ட முடியும் னு சசிகலா ஜெயலலிதா சொன்ன சிலந்தி கதை சொல்லி ஈபிஸை கூடாரத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான

Image சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்