Tamil News & POLLING

 

நெல்லை அரசுப் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் இடையே சாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவம்!

1 year ago 02 ஜூலை 2024 10:58 AM | views : 150
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதி அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் பொன்னாக்குடி, மாயனேரி, மருதகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை இடைவேளையின்போது பொன்னாக்குடி மற்றும் மாயனேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரியவருகிறது.

இந்த மோதலில், 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கையில் படுகாயமும், மற்றொரு மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போக செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், "மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர்.

ஜாதி பெயரைச் சொல்லி தாக்குதல்: அப்போது, நாங்களும் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, ஜாதி பெயரைச் சொல்லி எங்களை தாக்கினர். எங்கள் ஊரை வைத்து ஜாதி அறிந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இப்பள்ளியில், இரு சமூக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் கூறும்போது, "ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, இருவேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது பொன்னாகுடி மற்றும் மாயனேரி கிராம மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கு தொடர்பே இல்லாத மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த பிறகுதான் இவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என தெரிவித்தனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் AIADMK ADMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் PMK சீமான் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை CONGRESS பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி COIMBATORE SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கைது கொலை வடகிழக்கு பருவமழை கோவை தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் விடுமுறை TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் ஓபிஎஸ் NELLAI திருநெல்வேலி THIRUMAVALAVAN திருமாவளவன் நெல்லை THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தென்காசி AJITH டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு டாப் நியூஸ் அஜித் TAMIL CINEMA ASSEMBLY ELECTIONS வன்னியர் SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION தேவர் கொரோனா பாலியல் தொல்லை OPS நயினார் நாகேந்திரன் வானிலை ஆய்வு மையம் MADURAI 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON