INDIAN 7

Tamil News & polling

அரசு பஸ்சில் ஏறி மக்கள் குறை கேட்ட முதல்வர்..!

23 அக்டோபர் 2021 08:14 AM | views : 75
Nature

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏற்படும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகருக்கு வந்த மாநகர பஸ்சில் முதல்வர் ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு பயணிகள், இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் விடுத்த கோரிக்கைகளை கவனமுடன் கேட்ட முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து, முகக்கவசம் முறையாக அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்