POLLING FLAMES

 

நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல்: பின்னணி என்ன?

1 year ago 16 நவம்பர் 2024 11:17 AM | views : 229
நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல் எங்கே இருந்து தொடங்கியது அதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.

நயன்தாராவின் பிறந்தநாளில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் அவரது டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் இதெல்லாம் குறித்து அந்த டாக்குமெண்ட்ரியில் இடம்பெறுகிறது. இயக்குநர் விக்னேஷ்சிவனுடனான காதல் மலர்ந்த படம் ‘நானும் ரெளடிதான்’. அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை.






படத்தின் பிடிஎஸ் காட்சிகளை இந்த டாக்குமெண்ட்ரியின் டிரெய்லரில் பார்த்த தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நயன்தாராவுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். பொதுவெளியில் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ளும் தனுஷ் தன் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தின் காரணமாகவே டாக்குமெண்ட்ரி காட்சிகளுக்கு இரண்டு வருடங்கள் அனுமதி தராமல் இழுத்தடித்து இப்போது வக்கீல் நோட்டீஸூம் அனுப்பியிருக்கிறார் என நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை தனுஷூக்கும் எதிராக வெளியிட்டுள்ளார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன் - தனுஷூக்கு இடையில் ஆரம்பித்த நட்பு ‘எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷூக்காக சம்பளம் வாங்கிக் கொள்ளாமலேயே ஒரு பாட்டுக்கும் நயன்தாரா நடனம் ஆடும் அளவிற்கு வலுவாகவே இருந்தது. பின்பு எங்கிருந்து ஆரம்பித்தது இந்த விரிசல்?

விஜய்சேதுபதியை வைத்து தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க தனுஷ்தான் கேட்டார். நண்பனுக்காக சம்மதித்தார் நயன். பின்பு விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர நயன்தாராவுக்கும் தனுஷூடான நட்பின் நெருக்கம் குறைந்தது. ஒருமுறை நயன்தாராவை தனுஷ் பார்க்க வந்தபோது அங்கு விக்னேஷ்சிவன் இருந்ததால் தனுஷ் திருப்பி அனுப்பப்பட்டதால் அவருக்கு கோபம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுவே, தனுஷ்- நயன்தாரா விரிசலின் ஆரம்பப்புள்ளி. காதலால் இருவரும் படத்தில் சரியாக கவனம் செலுத்தாததால் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், இந்தப் படத்தால் தனக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தனுஷ் குற்றம் சொன்னார். இதனால், காயப்பட்ட நயன்தாரா தனுஷிடம் அந்த நஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதை மனதில் வைத்தே தனுஷ் இப்போது நயன்தாரா டாக்குமெண்ட்ரியில் ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் அனுமதி கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சொல்லியிருக்கிறார்.









மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் வன்னியர் தேவர் KEERTHY SURESH பிரதமர் மோடி OPS தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக சீமான் கைது NELLAI நெல்லை THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS SURIYA தீபாவளி ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை அன்புமணி விடுமுறை தூத்துக்குடி தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் CSK மதுரை