INDIAN 7

Tamil News & polling

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு- ஜம்மு காஷ்மீர், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி

06 அக்டோபர் 2024 01:49 AM | views : 91
Nature

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 56-66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கணித்துள்ளது.

பாஜக 18- 24, ஜேஜேபி 0- 3 தொகுதிகளிலும், மற்றவை 2- 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல், சிஎன்என் நியூஸ் 18 தகவலின்படி காங்கிரஸ் 59, பாஜக 21, ஆம் ஆத்மி 0, மற்றவை 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்