INDIAN 7

Tamil News & polling

பாலியல் அத்துமீறல்கள் : பெயர் சொல்ல விரும்பவில்லை - நடிகை ராதிகா பரபரப்பு பேட்டி!

02 செப்டம்பர் 2024 01:06 PM | views : 71
Nature

சென்னை: ஹேமா கமிட்டி போலவே தமிழ்த் திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.

மலையாளப் படம் ஒன்றில் தான் நடித்த போது அங்கிருந்த கேரவனில் ரகசிய கேமராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள் என நடிகை ராதிகா சொல்லியிருந்த விஷயம் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக கேரள காவல்துறையினரிடம் அவர் புகார் கொடுத்திருக்கிறார் எனவும், சிறப்பு விசாரணை குழுவினர் ராதிகாவிடம் தொலைபேசி மூலம் விசாரித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், தான் புகார் கொடுக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்துவதற்காகவே தன்னிடம் அவர்கள் பேசியதாகவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் ராதிகா.



இதுபற்றி ராதிகா இன்றைய செய்தியாளர்களை சந்திப்பில் மேலும் பேசியிருப்பதாவது, “கமிட்டி அமைக்க வேண்டிய அளவுக்கு தமிழில் அக்கிரமங்கள் நடக்கிறது என்பது அர்த்தமில்லை. இன்று நிறைய படித்தவர்களும் தைரியமானவர்களும் இந்தத் துறையில் இருக்கிறார்கள். நம்பிக்கையுடனும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள். இருந்தாலும் இரண்டாவது இடத்தில் இருக்கும் கேரக்டர் ஆர்டிஸ்ட் போன்றவர்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

என்னை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டேன். மோகன்லால் சார், “என் செட்டில் நடந்ததா?” என்று கேட்டார். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று அவரிடம் சொல்லி விட்டேன். பெரிய நடிகர்கள் அங்கு இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான இடமாகவே ஹேமா கமிட்டியை பார்க்கிறேன்.





இதை எல்லாம் சரி செய்வதற்காகவே இப்போது நான் பேசினேன். கோலிவுட்டிலும் ஹேமா கமிட்டி போல ஒரு கமிட்டி அமையும் என்றால், அது பற்றி நடிகர் விஷால் என்னிடம் கேட்டால் அவருக்கு அறிவுரை தரத் தயார். பெண்கள் பிறவியிலேயே வலிமையானவர்கள். ஆனால், எதோ ஒரு வகையில் எங்களை பின்னே தள்ளி விட்டார்கள். இப்போது வரை நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Like
2
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image 80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன் , மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்