INDIAN 7

Tamil News & polling

தாமிரபரணி - தேடல் முடிவுகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள்ள மழை தண்ணியா? 🌧️ நோயாளிகள் நிலை என்ன? தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை நெல்லை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது.

 திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் குளித்த 3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கொக்கந்தான்பாறையைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (17), ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (17), நிகில் ஆகியோர் ஜோதிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் உட்பட 6 பேர் முன்னீர்பள்ளம் அருகே வடுபூர்பட்டி பகுதியைச் சேர்ந்த வகுப்பு தோழன் ஒருவரின் இல்ல புதுமனை புகுவிழா

ரீல்ஸ் மோகத்தால் விபரீத செயல்... தாமிரபரணி ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்த வாலிபர்! இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர். ரெயில்

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு

எங்கள் மனம் வலிக்கிறது; ஜெய்பீம் சர்ச்சையில் பாரதிராஜாவிற்கு அன்புமணி பதில்! இயக்குநர் பாரதிராஜாவிற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர்

கன்னியாகுமரியில் கனமழை! 2 பேர் பலி; கலெக்டருடன் முதல்வர் அவசர ஆலோசனை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவு, நேற்று பகல் பொழுதிலும் விடாமல் பெய்த மழை நேற்று இரவு முழுவதும் நீடித்தது. தொடரும் மழை காரணமாக பேச்சிபாறை அணை,

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் ஆலோசனை கூட்டம் திசையன்விளை யில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் இணைப்பு திட்டம் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. விறுவிறுவென நடைபெறும்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்