சென்னை,
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக்கோரிம் தீர்மான நோட்டீசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். பதவிநீக்கம் கோரிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் செயல் நீதிபதிகளை மிரட்டும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சிவஞானம் உள்பட 56 பேர் கூட்டாக கையெழுத்திட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S