சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கனமழையை கொடுத்து சென்னை அருகே கடந்து சென்றது.
இதையடுத்து வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உள்பட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
20, 21 ஆகிய தேதிகளில் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S