POLLING FLAMES

 

நாளைக்கே ஸ்ரீசாந்த்தை.. வீட்டுக்கு அனுப்புங்கன்னு கோபத்தில் தோனி சொன்ன வார்த்தை!

1 year ago 13 ஜூலை 2024 04:46 AM | views : 214
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை அவர் இந்தியாவுக்காக கேப்டனாக வென்றுள்ளார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை அவர் படைத்துள்ளார்.

பொதுவாகவே களத்தில் அழுத்தமான சூழ்நிலைகளை கூலாக கையாளுவதில் வல்லவரான தோனி சில நேரங்களில் பொறுமையை இழந்து கோபப்பட்ட தருணங்களும் உள்ளது. அந்த வகையில் 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிபெர்ஹா நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீசாந்த் அவரை கோபமடைய வைத்த பின்னணியை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.


அந்தப் போட்டியில் தம்மை போல ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ரீசாந்தை தண்ணீர் பாட்டில்களை தூக்குவதற்காக பவுண்டரி எல்லையில் தோனி அமருமாறு சொன்னதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காத ஸ்ரீசாந்த் மாடியில் மசாஜ் செய்துகொள்ள சென்றதாக அஸ்வின் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த தோனி உடனடியாக நாளை ஸ்ரீசாந்தை நாட்டுக்கு திருப்பியனுப்புங்கள் என்று சொன்னதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “தோனியிடம் நான் ஸ்ரீசாந்த் உடைமாற்றும் அறையின் மாடியில் இருக்கிறார் என்று சொன்னேன். அப்போது மாடியில் இருந்து கீழே இறங்கி மற்ற ரிசர்வ் வீரர்களுடன் உட்காருமாறு ஸ்ரீசாந்திடம் சொல்லுங்கள் என்று தோனி என்னிடம் சொன்னார். அதன் பின் நான் தண்ணீர் தூக்கும் எனது வேலைக்கு திரும்பினேன்”

“அதற்கடுத்த முறை தோனி ஹெல்மெட் கேட்டார். அப்போது தோனி கோபமாக இருந்தது என்னால் உணர முடிந்தது. அவர் அப்படி கோபமாக இருந்து நான் பார்த்ததில்லை. அப்போது என்னிடம் ஸ்ரீசாந்த் எங்கே? என்ன செய்கிறார்? என்று மீண்டும் தோனி கேட்டார். அதற்கு ஸ்ரீசாந்த் மசாஜ் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னேன்”


“அப்போது எதுவும் சொல்லாத தோனி அந்த ஓவர் முடிந்ததும் மீண்டும் ஹெல்மெட் மாற்றும் போது “ஒன்று செய். ரஞ்சிப் சாரிடம் (மேனேஜர்) சென்று ஸ்ரீசாந்த் இங்கே இருப்பதற்கு விரும்பவில்லை எனவே நாளை அவரை இந்தியாவுக்கு அனுப்ப விமான டிக்கெட்டை புக் செய்யுமாறு சொல்” என்று என்னிடம் சொன்னார். அவர் அப்படி சொன்னதை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவரது முகத்தைப் பார்த்தேன். அதற்கு என்னிடம் மீண்டும் நான் சொல்லும் ஆங்கிலம் புரியவில்லையா? என்று தோனி கோபமாக சொன்னார். அதனால் ஸ்ரீசாந்த் உடையை போட்டுக்கொண்டு அடுத்த முறை தோனி தண்ணீர் கேட்ட போது கொண்டு செல்ல தயாராக இருந்தார்” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH OPS பிரதமர் மோடி கைது தமிழ்நாடு சீமான் தேவர் வன்னியர் அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் மதுரை அன்புமணி ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தென்காசி பாலியல் தொல்லை RAJINIKANTH