தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸுடனான மோதலுக்குப் பின்னர் அவரின் மகன் அன்புமணி வசமிருக்கும் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தனித்துக் களம்காண முடிவெடுத்துள்ள ராமதாஸ், 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் மூன்று கட்டங்களாக வெளியிட்டிருந்தார்.தருமபுரி, பென்னகரம் உள்பட 30 தொகுதிகளில் ராமதாஸ் தலைமையிலான பாமக சுயேச்சையாகப் போட்டியிடுகிறது.இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தலில் 30 தொகுதிகளில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அந்த 30 பேருக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Party founder Ramadoss has announced that the 'Cylinder' symbol has been allotted to 30 PMK candidates contesting the Tamil Nadu Legislative Assembly elections.
« முந்தைய செய்தி (Previous)
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: