Tamil News & polling
திருச்சி:
பெரம்பலூர், மதுரை, கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஆர்.வினேஷ், ஆர்.திபாக்கரன், கே.ரிஸ்வந்த், கே.திருமாவளவன், டி.ச ரவணன், கே.வெங்கடேஷ், அ.அசேன் ஆகிய 7 வாலிபர்கள் தனியார் நிறுவனம் மூலம் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.
இதற்காக வாணியம்பாடியை சேர்ந்த சபீர்கான் என்ற ஏஜெண்டிடம் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்து கடந்த ஜூலை மாதம் குவைத்துக்கு சென்ற அவர்களுக்கு டிரைவர் வேலை கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. முதலில் 8 மணி நேரம் வேலை என சொல்லியதில் 18 மணி நேரம் வேலை கொடுக்கப்பட்டது
இதில் திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய வினேஷ், சரவணன், வெங்கடேஷ், அசேன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் சரியான தூக்கம் இல்லாமலும், சாப்பிட வழி இல்லாமலும் தவித்த 7 பேரும் தப்பி வந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டு தங்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே 7 தமிழர்கள் நிலையை அறிந்த தொழிலதிபர் ஹைதர் அலி 7 பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்ததோடு தனது நிறுவனத்தில் வேலையும் தருவதாக கூறினார். இந்திய தூதரகத்தில் பணிபுரியும் தென்காசி ஷாஜகான் என்பவர் எடுத்த கடும் தொடர் முயற்சியில் பாதிக்கப்பட்ட 7 தமிழர்களின் பாஸ்போர்ட்களை அவர்களது ஸ்பான்சரை தூதரகம் வரவழைத்து பெற்று கொடுத்தார்.
7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress