POLLING FLAMES

 

பல கேப்டன்கள் வாயில் சொல்வதை ரோகித் ஷர்மா செயலில் காட்டியுள்ளார் - கில்கிறிஸ்ட் பாராட்டு

1 year ago 26 ஜூன் 2024 08:15 AM | views : 221
உச்சகட்டத்தை நெருங்கியுள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக உண்மையான பரம எதிரியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய செமி ஃபைனலில் ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்கள் குவித்தார். அப்போட்டியில் முதல் ஓவரிலேயே விராட் கோலி அவுட்டாகியும் அதிரடியை நிறுத்தாத அவர் சுயநலமின்றி தன்னுடைய சொந்த சதத்தை பற்றி கவலைப்படாமல் 92 ரன்களில் அவுட்டானார்.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடியதால் தனது டி20 கேரியரை பற்றி கேள்வி கேட்டவர்களுக்கு ரோகித் சர்மா பதில் கொடுத்துள்ளதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்று பல கேப்டன்கள் வாயில் சொல்வதை ரோகித் சர்மா செயலில் காட்டியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இப்படித்தான் விளையாடுவோம் என்ற கருத்துக்களை அவர் களத்திற்கு வெளியே சொல்கிறார். ஆனால் களத்திலும் அதை அவர் செய்வது மற்றவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய பொழுதுபோக்காகும். டி20 கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்தும் தாக்கம், ஐபிஎல் புள்ளி விவரங்கள் போன்றவற்றில் கேள்விக்குறி இருந்தது”

“ஆனால் தற்போதைய செயல்பாடு மீண்டும் அவருடைய தலைமையின் மதிப்பையும் அவரால் ஈர்க்கப்பட்ட ஒரு அணியின் மதிப்பையும் வலுப்படுத்துகிறது. ஒரு பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தெரிந்து செயல்படுகிறார். முடிவைப் பற்றி கவலைப்படாமல் செயல்முறையில் கவனம் செலுத்துவதாக அடிக்கடி பல கேப்டன்கள் சொல்வதை நாம் கேட்போம்”


“அதே போல அவரும் என்ன செயல்முறை செய்ய வேண்டும் என்பதை சொன்னார். எந்த சூழ்நிலையிலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பதே அவருடைய செயல்முறை. அதற்காக உங்களுடைய பேட்டிங் பார்ட்னரை (விராட் கோலி) இருந்தாலும் பரவாயில்லை அதிரடியான செயல்முறையில் கவனம் செலுத்துங்கள் என்பதே அவருடைய அணுகுமுறை. அந்த வகையான நிபுணத்துவம் மற்றும் பிளேயிங் லெவனில் அவர் கொடுக்கும் வழிகாட்டுதல் ஆகியவற்றை பின்பற்றி இந்திய அணி செல்கின்றனர்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக கைது ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION அஜித் திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை