ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. இதில் கொரோனாவால் 2020ம் ஆண்டு மட்டும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மக்கள் தொகை பதிவானது. ஐநா கணிப்புப்படி அடுத்த ஆண்டு, அதாவது இன்னும் ஒன்றரை மாதத்தில் அதிக மக்கள் தொகை நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2030ல் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ல் 970 கோடியாகவும், 2080ல் 1040 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050ல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் 50 சதவீதத்தை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளே கொண்டிருக்கும் எனவும் ஐநா கூறி உள்ளது.