Tamil News & POLLING
நெல்லை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ராதாபுரம் தொகுதியை கைப்பற்றுவதில் திமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு இடையே கடும் மல்யுத்தமே நடந்து முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடக்கத்தில் ராதாபுரம் தொகுதி, முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஒதுக்கப்படுவதாகவே அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட ஞானதிரவியத்திற்கு, இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் தரப்பு ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதற்கட்டப் பட்டியல்கள் தயாரான நிலையில், தற்போதைய எம்.எல்.ஏ-வும் சபாநாயகருமான அப்பாவு போர்க்கொடி தூக்கியுள்ளார். "ராதாபுரம் எனக்குத்தான் வேண்டும்" என்பதில் அவர் ஒற்றைக்காலில் நின்றதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அப்பாவுக்கு ஆதரவாக கனிமொழி அணியினர் களம் இறங்கியது அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி தனக்கு ஒதுக்கப்படாவிட்டால், சுயேச்சையாகப் போட்டியிடவும் தான் தயாராக இருப்பதாக அப்பாவு தலைமைக்கு அதிரடி மெசேஜ் அனுப்பியதாகத் தகவல் கசிந்துள்ளது.
இந்தத் தீவிர அழுத்தம் காரணமாக, இறுதியில் ஞானதிரவியத்தை ஓரம் தள்ளிவிட்டு, ராதாபுரம் தொகுதியை மீண்டும் தனது வசம் கொண்டு வந்துள்ளார் அப்பாவு.
தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாலும், அப்பாவுக்கு கள நிலவரம் சாதகமாக இருக்கிறதா என்பது கேள்விக் குறியே.
பிடிவாதம் பிடித்து தொகுதியை வாங்கிய சபாநாயகர் அப்பாவு, மக்களின் அதிருப்தியை மீறி மீண்டும் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
« முந்தைய செய்தி (Previous)
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏன்? -...அடுத்த செய்தி (Next) »
விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் வைக்கவில்லை:...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: