INDIAN 7

Tamil News & polling

தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிராபகர்

02 ஜனவரி 2026 02:29 PM | views : 84
Nature

சென்னை,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். பொங்கலுக்கு முன் பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்தநிலையில், ஜே.சி.டி.பிராபகர் தவெகவில் இணைந்துள்ளது ஓபன்னீர் செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைந்த பின் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வீடுதோறும் விஜய் முழக்கமாக உள்ளது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது. பொறுப்பு இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழும் என்பதற்காக இணைந்துள்ளேன் என்றார்.

தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிராபகர்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என

Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்