ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதால் மலட்டு தன்மை பிரச்சனை ஏற்படுவதாக பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அறவியல் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஆடைகளிலுமே பெரிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் தற்போதெல்லாம் புதுப்புது டிசைன்களில் ஆடைகள் விற்கப்படுகின்றன.
அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கி அணிகின்றனர். ஆனால் சில ஆடைகள் பெரும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக ஆண்கள் பெண்கள் இருவரும் அணிகின்ற உள்ளாடைகளும் தரமானதாக இருக்க வேண்டும்.
மேலும் இறுக்கமாக உள்ளாடைகளை அணிய கூடாது. இவ்வாறு இறுக்கமாக அணிந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் ஆய்வுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேப்போல் பெண்கள் இறுக்கமாக உள்ளாடைகளை அணிவதால் பிறப்புறுப்பில் சில தொற்று நோய் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்தவரை இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.