INDIAN 7

Tamil News & polling

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

18 அக்டோபர் 2021 02:38 AM | views : 71
Nature

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றது.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு (C VijayaBaskar) சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.



முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றதை அடுத்து சில அதிரடி முடிவுகளை திமுக அரசு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் குறி வைக்கப்பட்டுள்ளனர்.



அதன்படி முதல் படியாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டு அவரிடமிருந்து நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது. அடுத்ததாக அதிமுக முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. இவரிடமிருந்து விலை உயர்ந்த கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது நடந்து வரும் இந்த சோதனையில், அவருக்கு சொந்த நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.





Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்