INDIAN 7

Tamil News & polling

மனநலம் பாதித்தவர் தந்தைக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் பரந்த தகவல்!

16 மே 2021 10:49 AM | views : 68
Nature

திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்கச் சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.


செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்குச் சென்றார்.


காக்களூரில் அவரை மறித்த காவல்துறையினர் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியது குறித்து அவர் முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்தார்.


இதையடுத்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் காவல் ஆய்வாளர், பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததுடன், அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வழங்கினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்