INDIAN 7

Tamil News & polling

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான்- பிரேமலதா விஜயகாந்த்

04 நவம்பர் 2024 10:03 AM | views : 71
Nature

மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.

* கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

* தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.

* 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.

* தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.

* அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.

* எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.

* எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

* அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்