தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போட தயங்குகிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். ஆனால் தடுப்பூசிக்கும் மது பழக்கத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனாலும் தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து தயங்குவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். இதனிடயே இதுபற்றி மருத்துவர்கள் கூறும் போது, ''மது அருந்துபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதால் மது அருந்துபவர்களுக்கு எந்தவொரு அதிகமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக தகவல்கள் இல்லை. அதனால் மது அருந்துபவர்கள் தாராளமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். அப்படி ஒரு கட்டாயமும் இதுவரை அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகவில்லை" என்றார்கள்.