கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்பு

மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூரை சோ்ந்த சிறுவன் ஆா்ஜவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்கு காய்ச்சலும், வாந்தி பேதியும் இருந்துவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவனுக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆா்ஜவ் திங்கள்கிழமை உயிரிழந்தான். இதன்மூலம், கேரளத்தில் இந்தாண்டில் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.




கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷிகெல்லா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மேலும் 3 சிறுவா்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.


138 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு: கேரள பொது சுகாதார சேவைகள் இயக்குநரக புள்ளிவிவரப்படி, அந்த மாநிலத்தில் திங்கள்கிழமை வரை 138 போ் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவுமும், இதில் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஷிகெல்லா பாக்டீரியா, கெட்டுப் போன உணவு அல்லது தண்ணீா் மூலம் பரவக்கூடியது. இந்த பாக்டீரியா பாதித்தோருக்கு காய்ச்சல், வாந்தி - பேதி, கடுமையான வயிற்று வலி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel