Tamil News & polling
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.
கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரம் ரூபாய் செலுத்தி விரைவு தரிசனத்தில் சென்று முருகப்பெருமானை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 1000 ரூபாய் விரைவு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனமும், ரூ.100 சிறப்பு தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress