Tamil News & polling
இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவராக இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி J.சௌமியா ஜெகதீஷ் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன கொடுமை என்னவென்றால் சௌமியா ஜெகதீஷ் அவர்கள் வேட்புமனு மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்குமே வெளியில் தலைகாட்டவே இல்லை. இப்படிப்பட்ட நபருக்கு செர்மன் பதவி வழங்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் VSR.ஜெகதீஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர் என்பதால் காலம் காலமாக திமுகவில் இருப்பவர்கள் நிலைமை மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.
VSR.ஜெகதீஷ் பெற்ற இந்த வெற்றி சபாநாயகர் திரு அப்பாவு அவர்களின் ஆதரவுடன், திமுக நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அவர்களை எதிர்த்து பணபலத்துடன் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி பெற்ற வெற்றி என்பதால் நெல்லை மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பு உருவாகி உள்ளது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் திமுக தலைமைக்கு வேறு நபர்களின் பெயரை பரிந்துரை செய்த பின்பும் தலைமை அதனை கண்டுகொள்ளவில்லை.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress