POLLING FLAMES

 

துரதிஷ்டவசமாக மழையும் இலங்கைக்கு எதிராக விளையாடியது.. அசலங்கா வருத்தம்

1 year ago 29 ஜூலை 2024 03:12 AM | views : 212
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடி வருகிறது. ஜூலை 27ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை பரிதாபமாக தோற்றது.

பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 161/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, நிஷாங்கா 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து இந்தியா சேசிங் செய்கையில் மழை வந்ததால் 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது.


அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30, கேப்டன் சூரியகுமார் 26, ஹர்திக் பாண்டியா 22* ரன்கள் எடுத்து 6.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள இந்தியா புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் புதிய கேப்டன் அசலங்கா தலைமையிலும் இலங்கை சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் முதல் போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் கடைசி 5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே தோல்விக்கு காரணமானதாக இலங்கை கேப்டன் அசலங்கா தெரிவித்துள்ளார். போதாகுறைக்கு மழை வந்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் உட்பட மிடில், லோயர் மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் நாங்கள் வெளிப்படுத்திய பேட்டிங் ஏமாற்றமாக அமைந்தது”

“கண்டிப்பாக நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங்கில் முன்னேற வேண்டும். இந்த பிட்ச்சில் பந்து பழையதாகும் போது பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிறது. ஆனால் தோல்விக்கு அது காரணமல்ல. சர்வதேச வீரர்களான நாங்கள் வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் பேட்டிங்கில் எங்களுடைய அணுகுமுறையில் முன்னேற்றம் காண வேண்டும்”


“இப்போட்டியில் நாங்கள் 15 – 18 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக மழையும் எங்களுக்கு எதிராக விளையாடியது. இருப்பினும் அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. மழையால் வெளிப்புற களங்கள் ஈரமாக இருந்ததால் 8 ஓவர்கள் கொண்ட போட்டியில் எதிரணி வெல்வது எளிது” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அமமுக தமிழ்நாடு OPS KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் பிரதமர் மோடி வன்னியர் கைது NELLAI TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா SURIYA நெல்லை தீபாவளி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் RAJINIKANTH அஜித் பாலியல் தொல்லை மதுரை கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி விடுமுறை தென்காசி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை