தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது?- உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.

* முதலமைச்சர் விஜய் மீதே வழக்கு உள்ளது. ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக வழக்கின் போது தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஒப்புக்கொண்டவர் முதலமைச்சர் விஜய்.

* பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

* வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

* எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.

* முதலமைச்சரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறவினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

* கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?

* விஷ்ணு ரெட்டி, சுஜய் மற்றும் அனில் கன்ட்ரோலில் கனிமவளம் உள்ளது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டுகிறேன்.

* ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.

* முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்.

* முதலமைச்சர் பேசியதற்கு ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.

* திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா, ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்.

* திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம், அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

* மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து.

* கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக IUML எம்எல்ஏ பேசியுள்ளார்.

* வெளிப்படையாக குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது என்றார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel