ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

  ஏப்ரல் 11, 2024 | 02:57 am  |   views : 157


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.



ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு:



ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மானாமதுரை, கடலாடி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.இத்தொகுதி முதல் மூன்று முறையும் காங்கிரஸ் வசமிருந்தது. நாகப்ப செட்டியார் என்பவரே இத்தொகுதியின் முதல் எம்.பி ஆவார்.ஃபார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த பி.கே.மூக்கையா தேவர் ராமநாதபுரம் தொகுதியின் எம்.பியாக இருந்தவர். சேதுபதி சமஸ்தான வாரிசு ராஜேஸ்வர சேதுபதி, நடிகர் ஜே.கே ரித்திஷ், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி போன்றோர் இத்தொகுதியின் பரிட்சயமான எம்.பிக்கள் ஆவர்.ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், ஃபார்வர்டு பிளாக், த.மா.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.



2019 தேர்தல் முடிவுகள்:



Also read...  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு


2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி 44.29% வாக்குகளுடன் மொத்தம் 469,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்றார். தனியாக களமிறங்கிய அமமுகவின் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 14,925 வாக்குகளும் கிடைத்தன.



ராமநாதபுரம் தொகுதியை பற்றி..



தமிழகத்தின் பின் தங்கிய வறட்சி பகுதியாக கருதப்படுகிறது ராமநாதபுரம் மாவட்டம். குடிநீர் பிரச்னை தலையாய பிரச்னையாகும். அதே நேரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், உலகின் முதல் கோவிலாக கருதப்படும் உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம் நவகிரக கோவில், திருப்புல்லானி, ஏர்வாடி தர்கா என ஆன்மிக ரீதியாகவும் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க இடமாக திகழ்கிறது ராமநாதபுரம். இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அகதிகள் முகாம் என சென்சிடிவ் ஆன விவகாரங்கள் உள்ளது இத்தொகுதி. முன்பெல்லாம் தமிழக மீன்வர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்தது. தற்போது அது முற்றிலும் குறைந்துள்ளது.புயலால் அழிந்த தனுஷ்கோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடல் மீது போடப்பட்ட பிரம்மாண்ட பாம்பன் பாலங்கள் என இத்தொகுதியின் சிறப்புகள் ஏராளம். என்னன்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியது இத்தொகுதி.



முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்கள். குறிப்பாக மீன் பிடி தொழில் சார்ந்த ஏற்றுமதி தொழிலும் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் தொகுதியில் நடந்துள்ளன.மொத்த வாக்காளர்கள் எவ்வளவு?கடந்த ஜனவரி 2024-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.68 லட்சம். இதில் ஆண்கள் 5.80 லட்சம் பேர், பெண்கள் 5.88 லட்சம் பேர்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்



2024 தேர்தலில் ராமநாதபுரம் பிரதமர் மோடியே களமிறங்கும் தொகுதியாக பேசப்பட்டது. தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கியிருப்பதால் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.



அதிமுகவில் தலைமை பொறுப்பு வகித்து பின்னர் அக்கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் பெரும்பான்மை சமூகமான முக்குலத்தோர் வகுப்பு வாக்குகள் அவருக்கு பக்கபலம். கூடுதலாக பாஜக ஆதரவும் அவருக்கு உள்ளது. ஓபிஎஸ்-ஐ ஒழித்துக்கட்ட வேண்டும் என முனைப்புடன் அவருக்கு எதிராக மேலும் 5 பன்னீர்செல்வத்தை எதிர் தரப்பு களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.



தற்போதைய அளவில் திமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே தான் பிரதான போட்டி என கூறப்படுகிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்.பி ஆன ஐ.யூ.எம்.எல் கட்சியின் நவாஸ் கனிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைத்துள்ளது. அவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளும், திமுக கூட்டணியின் அசுர பலத்துடன் அவர் தேர்தலை எதிர்கொள்கிறார்.



அதிமுக சார்பாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். எனினும் அவரின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம் ஆகும். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அண்ணன் திமுக பிரமுகர் அக்ரி கணேசன். மற்றொரு சகோதரர் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா. இவரின் தந்தை எம்.ஜி.ஆரை எதிர்த்து திமுக சார்பாக போட்டியிட்டவர். முக்குலத்து சமூக வாக்குகள் இவரின் பலம்.



நாம் தமிழர் சார்பாக சந்திர கலா போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 15 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 16 hours ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 4 days ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 5 days ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 5 days ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 5 days ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 6 days ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 1 week ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என