ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

  ஏப்ரல் 11, 2024 | 02:57 am  |   views : 186


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.



ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு:



ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மானாமதுரை, கடலாடி, அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.இத்தொகுதி முதல் மூன்று முறையும் காங்கிரஸ் வசமிருந்தது. நாகப்ப செட்டியார் என்பவரே இத்தொகுதியின் முதல் எம்.பி ஆவார்.ஃபார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த பி.கே.மூக்கையா தேவர் ராமநாதபுரம் தொகுதியின் எம்.பியாக இருந்தவர். சேதுபதி சமஸ்தான வாரிசு ராஜேஸ்வர சேதுபதி, நடிகர் ஜே.கே ரித்திஷ், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி போன்றோர் இத்தொகுதியின் பரிட்சயமான எம்.பிக்கள் ஆவர்.ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், ஃபார்வர்டு பிளாக், த.மா.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.



2019 தேர்தல் முடிவுகள்:



Also read...  ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்


2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி 44.29% வாக்குகளுடன் மொத்தம் 469,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்றார். தனியாக களமிறங்கிய அமமுகவின் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 14,925 வாக்குகளும் கிடைத்தன.



ராமநாதபுரம் தொகுதியை பற்றி..



தமிழகத்தின் பின் தங்கிய வறட்சி பகுதியாக கருதப்படுகிறது ராமநாதபுரம் மாவட்டம். குடிநீர் பிரச்னை தலையாய பிரச்னையாகும். அதே நேரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், உலகின் முதல் கோவிலாக கருதப்படும் உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம் நவகிரக கோவில், திருப்புல்லானி, ஏர்வாடி தர்கா என ஆன்மிக ரீதியாகவும் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க இடமாக திகழ்கிறது ராமநாதபுரம். இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அகதிகள் முகாம் என சென்சிடிவ் ஆன விவகாரங்கள் உள்ளது இத்தொகுதி. முன்பெல்லாம் தமிழக மீன்வர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்தது. தற்போது அது முற்றிலும் குறைந்துள்ளது.புயலால் அழிந்த தனுஷ்கோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடல் மீது போடப்பட்ட பிரம்மாண்ட பாம்பன் பாலங்கள் என இத்தொகுதியின் சிறப்புகள் ஏராளம். என்னன்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியது இத்தொகுதி.



முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்கள். குறிப்பாக மீன் பிடி தொழில் சார்ந்த ஏற்றுமதி தொழிலும் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சித் திட்டங்கள் தொகுதியில் நடந்துள்ளன.மொத்த வாக்காளர்கள் எவ்வளவு?கடந்த ஜனவரி 2024-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.68 லட்சம். இதில் ஆண்கள் 5.80 லட்சம் பேர், பெண்கள் 5.88 லட்சம் பேர்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்



2024 தேர்தலில் ராமநாதபுரம் பிரதமர் மோடியே களமிறங்கும் தொகுதியாக பேசப்பட்டது. தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கியிருப்பதால் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.



அதிமுகவில் தலைமை பொறுப்பு வகித்து பின்னர் அக்கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் பெரும்பான்மை சமூகமான முக்குலத்தோர் வகுப்பு வாக்குகள் அவருக்கு பக்கபலம். கூடுதலாக பாஜக ஆதரவும் அவருக்கு உள்ளது. ஓபிஎஸ்-ஐ ஒழித்துக்கட்ட வேண்டும் என முனைப்புடன் அவருக்கு எதிராக மேலும் 5 பன்னீர்செல்வத்தை எதிர் தரப்பு களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.



தற்போதைய அளவில் திமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே தான் பிரதான போட்டி என கூறப்படுகிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்.பி ஆன ஐ.யூ.எம்.எல் கட்சியின் நவாஸ் கனிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைத்துள்ளது. அவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளும், திமுக கூட்டணியின் அசுர பலத்துடன் அவர் தேர்தலை எதிர்கொள்கிறார்.



அதிமுக சார்பாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். எனினும் அவரின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம் ஆகும். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அண்ணன் திமுக பிரமுகர் அக்ரி கணேசன். மற்றொரு சகோதரர் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா. இவரின் தந்தை எம்.ஜி.ஆரை எதிர்த்து திமுக சார்பாக போட்டியிட்டவர். முக்குலத்து சமூக வாக்குகள் இவரின் பலம்.



நாம் தமிழர் சார்பாக சந்திர கலா போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 14 hours ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 15 hours ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 18 hours ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 18 hours ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 1 day ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 1 day ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 1 day ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.


ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்

2024-05-13 12:32:23 - 2 days ago

ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஜெயக்குமாரின் உடலில் 15 செ.மீ-50 செ.மீ. அளவு கடப்பா கல், கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் வாயில் இருந்தது. ஜெயக்குமாரை காணவில்லை என 3-ம் தேதி புகார் வந்தது; அன்று இரவு 9