குரூப் 4 முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிசம்பர் 30, 2022 | 09:41 am | views : 2225
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி-யில் குரூப் 4 தேர்வு அதிகப்படியான பணியிடங்களைக் கொண்டு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியத் தகுந்த பணியாளர்களை இத்தேர்வின் மூலம் தேர்வு செய்வர். ஒரு நிலை தேர்வு மட்டும் கொண்டு தேர்வு செய்யப்படுவதால் இப்பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிப்பர். 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் 7,301 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 24 ஆம் நாள் இப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 18 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இப்பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற தீர்ப்பு முடிவுகள் வெளியிடுவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது. நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Also read... பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்
முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆக தேர்வர்கள் சிரமம் அடையத் தொடங்கினர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில் குரூப் 4 பணியிடங்கள் குறிப்பிடப்படாமல் தேர்வு 2024 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு அட்டவணையில் குறைந்த அளவிலேயே பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மேலும் தேர்வர்கள் மற்றும் தேர்வுக்குத் தயார் ஆகுபவர்களை அதிருப்தி அடையச் செய்தது.
அந்த நிலையில், தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி முடிவுகள் தாமதம் ஆவது மற்றும் அட்டவணை குறித்த விளக்கத்தை அளித்தனர். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைத் தவிர இதர தேர்வாணையத்தில் மூலமாகவும் தகுதியானவர்களை அரசுப் பணியில் நியமனம் செய்வதாகவும், முடிவுகள் விரைந்து வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனிடையே, குரூப் 4 முடிவுகள் டிசம்பரில் வெளியாகாது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 ஆம் பணியிடங்களில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் அதிகரிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்ந்தது.
தற்போது டிசம்பர் 29 ஆம் நாள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் 2022 ஆம் ஆண்டு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'
பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,